Showing posts with label காதலர்கள். Show all posts
Showing posts with label காதலர்கள். Show all posts

Friday, March 29, 2013

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

படம் : எஜமான்
பாடல் : ஒரு நாளும்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்
தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு
ஆ ஆ ஆ…

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா
ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று
ஆ ஆ ஆ…

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது

படம் : கீதாஞ்சலி
பாடல் : ஒரு ஜீவன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்.. ஹோ..
என்னை கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்.. ஹோ
நீ இல்லை என்றால் என் வானில் என்றும்
பகல் என்று ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்த நாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மண மாலை சூடும் நாள் பார்க்கவே

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில்
மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் உந்தன்
நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா
நிழல் தந்து விலகுமா
இனிமேலும் என்ன சந்தேகமா

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

துள்ளி எழுந்தது பாட்டு

படம் : கீதாஞ்சலி
பாடல் : துள்ளி எழுந்தது
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு

குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்…
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை ?
காமன் கணை எனை வதைக்குது

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும்…
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாத்தியே ?
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயில் இசை கேட்டு