Friday, March 29, 2013

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி

திரைப்படம்: தாய்க்குப்பின் தாரம் (1956)
இசை: K.V. மகாதேவன்
பாடலாசிரியர்: மருதகாசி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

=======================================


பாலும் தேனும் பெருகி ஓடுது
பறந்த சீமையிலே
நாம பொறந்த சீமையிலே
ஆனா பாடுபடுறவன் வயிறு காயுது
பாதி நாளையிலே

வருசத்தில் பாதி நாளையிலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மானம் பொழியுது பூமி வெளயுது நாட்டிலே
நாம வாடி வதங்கி வேல செய்யிறோம் காட்டிலே
ஆனா தானியமெல்லாம் வேறே ஒருவன் கையிலே

தானியமெல்லாம் வேறே ஒருவன் கையிலே
இது தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே

அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பி

பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி

பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி
உன்னை புரிஞ்சுக்காமலே நடக்காதேடா அருமைத்தம்பி

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

No comments:

Post a Comment