Wednesday, March 27, 2013

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

படம்: உரிமைக்குரல்
இசை: மெல்லிசை மன்னர்
இயக்கம்: ஸ்ரீதர்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது…)

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது…)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது – இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது…)

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் – என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே கதை எழுது…)

4 comments:

  1. Anonymous10:07

    அறமையா பாடல் வரிகள்

    ReplyDelete
  2. Anonymous06:27

    தருன்

    ReplyDelete
  3. Anonymous10:37

    கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் டியூன் கே ஜே யேசுதாஸ் பி சுசிலா எம்ஜிஆர் லதா ஆக்டிங் 👌👌

    ReplyDelete
  4. Anonymous08:02

    காலத்தால் அழியாத காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று

    ReplyDelete