Friday, March 29, 2013

அச்சம் என்பது மடமையடா...

திரைப்படம்: மன்னாதி மன்னன் (1960)
இசை: M.S. விசுவநாதன்,ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
====================================

அச்சம் என்பது மடமையடா...
அஞ்சாமை திராவிடர் உடமையடா...

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே

அச்சம்...

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம்...

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

No comments:

Post a Comment